காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.
Saturday, 28 November 2015
தாம்பரத்தில் தமுமுக மற்றும் மமக செயல்வீரர்கள் கூட்டம்
காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.
தாம்பரத்தில்பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

நிகழ்ச்சியை தாம்பரம் நகர தமுமுக மற்றும் அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய நிர்வாகிகள் ஆசாத் காமில், கவுஸ்பாஷா, அஹமது ராஜா, முபாரக் அலி, தமீம் அன்ஸாரி, அமீனுதீன், ஆசிக் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கு கொண்டனர்.
Sunday, 22 November 2015
தாம்பரத்தில் தமுமுகவின் மனிதநேய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்
தாம்பரம் நகரம் சார்பாக பேரிடர் மீட்பு பணிகள்
தாம்பரத்தில் 14.11.15 அன்று பெய்த கன மழையின் போதே நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. முதல் கட்டமாக 15.11.2015 அன்று தமுமுக நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்ற மாணவரணி மற்றும் தமுமுக செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவரணியினர் மற்றும் நகர நிர்வாகிகள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். பின் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து முகநூலில் "தாம்பரம் நகராட்சியின் கவனத்திற்கு" என்று பதிவிட்டு நகராட்சியை பணியாற்ற முடுக்கினர்.
இரண்டாம் கட்டமாக மாநில அமைப்புச் செயலாளர்சகோ. யாக்கூப் அவர்கள் தென்காசி பொதுக்கூட்டம் முடித்து 16.11.2015 தாம்பரம் வந்தவுடன் மீட்பு பணிகளை செய்ய தமுமுக பேரிடர் மீட்பு குழுவை அமைத்து பணிகளை விரைவு படுத்தினார். அவரது ஆலோசனையின் படி கோவளத்திலிருந்து சகோ. கோவளம் யாக்கூப் அவர்களிடமிருந்து 30 பேர் அமரக்கூடிய வகையிலான பெரிய படகு ஒன்றையும் அதை இயக்க கோவளம் யாக்கூப், சௌகத் அலி, சாகுல்ஹமீது, அன்சர் தீன் ஆகிய கடலோடிகளையும் நகர நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.





காலை 10.00 மணிக்கு இராணுவம் மீட்பு பணிக்காக வந்தபோது அவர்களுக்கும் தமுமுக தொண்டர்கள் உதவி செய்தனர்.
16.11.15இரவிலிருந்து அடுத்தநாள் 17.11.15 நன்பகல் 12.15 வரை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை முடித்துவிட்டு பின் முடிச்சூர் பகுதிகளில் மீட்பு பணிக்காக படகை லாரியில் ஏற்றிச் சென்று அங்கு நிறைய மக்களை மீட்டெடுத்தது தாம்பரம் மக்களின் மனதில் தமுமுகவிற்கு தனியிடம் பெற்றுத்தந்தது என்பதை மறுக்க இயலாது. அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட் மக்கள் வரை அனைவரையும் மீட்டெடுத்ததில் தமுமுக என்றும் அனைத்து மக்களுக்குமான இயக்கம் என்பதை மீண்டுமொருமுறை நீருபித்தது.
வரதராஜபுரம் பகுதியில் குதாவும், நிஜாமும் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி துணிச்சலாக செயலாற்றினர். அங்கு தண்ணீரே சாக்கடையுடன் கலந்திருந்தது சில இடங்களில் ஆழம் அதிகமாக இருந்தது. இருப்பினும் இருவரும் துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு பணி செய்தனர். அதே போல் கோவளம் சகோதரர்கள் நால்வரும் படகை லாவகமாக இயக்கி எல்லாவிதமான சிக்கலான சூழலையும் சமாளித்து படகை செலுத்தினர். இறைவன் அவர்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக.
தாம்பரம் நகரம் சார்பாக வெள்ள நிவாரணப் பணிகள்
17.11.2015 மாலை மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் ஒரு பகுதியான கன்னடபாளையம் பள்ளிக்கூடத்தில் ரூபாய் 1 இலட்சத்திற்கும் அதிகமான செலவில் லுங்கிகள், சேலைகள், போர்வைகள்,பழங்களை மமக மாநில தலைவர் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் வழங்கினார்.
அதேபோல் 19.10.2015 அன்று காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம் சார்பாக தமுமுக, மமக சார்பாக, தாம்பரம் பகுதியில் சேவாசதன் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு1இலட்சத்து 50,000 ரூபாய் செலவில்1200 போர்வைகள், உடைகள் ஆகியவற்றை வெள்ள நிவாரண உதவியாக மமக மாநில அமைப்பு செயலாளர் சகோ. யாக்கூப் தலைமையில், மமக மாநிலப் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் வழங்கினார்கள்.
உதவும் உள்ளத்திற்கு உதவிய தமுமுக
தாம்பரத்தில் இயங்கிவரும் தொண்டுநிறுவனமான "உதவும் உள்ளம்" மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால்அவர்கள் தற்காலிகமாக பேபி உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமுமுக சந்தித்த போதுஅந்த இல்லத்தின் நிர்வாகி கண்ணியமிகு. துறைமுக லட்சுமி அவர்கள் சகோ. யாக்கூப் அவர்களிடம் அடிப்படைத் தேவைகளை கூறினார்.உடனடியாக அவர்களுக்கு டூத் பிரஷ், பக்கெட்டுகள், குவளைகள், போர்வைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடைகள் என ரூபாய் 85,000க்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது
பிரியாணி வழங்கிய மாணவர்கள்!
தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் நடந்த நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் தமுமுக மாவட்ட செயளாலர் அப்துல் ரவூப், தமுமுக மாவட்ட பொருளாளர் ஜாஹிர் ஹுசைன்,மமக மாவட்ட செயலாளர் சலீம்கான்,தொணடரணி செயலாளர் S.R.A.இப்ராஹிம்,தாம்பரம் நகர செயளாலர் A.ஆசாத் காமில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் N.Kஅக்பர்,முன்னால் நகர தலைவர் S.முஹம்மது இக்பால்,மாவட்ட மாணவர் இந்தியா செயளாலர் தமீம் அன்சாரி நகர துணைச் செயலாளர்கள் அமீனுதீன், ஷாஜஹான், நகர இளைஞரணி செயலாளர் அப்துல்ரஹ்மான், மாணவரணி செயலாளர் ஆசிக் ஹமீது மற்றும் நகர,வார்டு,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
Subscribe to:
Posts (Atom)