Monday, 30 April 2012

இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்

இலங்கை தம்புள்ள எனும் இடத்தில் உள்ள 67 ஆண்டுகால பாரம்பரியமிக்க பள்ளிவாசலை சேதப்படுத்தி முற்றிலுமாக தகர்க்க முயலும் சிங்கள புத்த குருமார்களின் செயலைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் இனவெறி ராஜபக்ஷே அரசைக் கண்டித்தும் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


மசூதி அமைந்துள்ள இடம் பௌத்தர்களின் புனித இடம் என்று கூறி அங்குள்ள பள்ளிவாசல் இடிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. கடந்த 20.04.2012 அன்று முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2000க்கும் அதிகமான புத்த மதகுருமார்கள் ஆயுதங்களுடன் காவல்துறை துணையோடு அப்பள்ளிவாசலைச் சுற்றி வளைத்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றி, பள்ளிவாசலை சேதப்படுத்தியுள்ளனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களது வெறித்தனம் முழுமையாக நிறைவேறவில்லை. ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரிய கோயில்களையும், தேவாலயங்களையும் சேதப்படுத்தி அழித்த சிங்கள வெறியர்கள் இப்போது தமிழ் பேசும் முஸ்லிம்களின் பள்ளிவாசலையும் சேதப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இதை முன்னிட்டு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைகளையும் வழிப்பாட்டு உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிங்கள இனவெறியர்களின் பாசிச போக்கை கண்டித்தும் தமுமுக நடத்திய இப்போராட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவர்கள் பேரா.எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், நாம்தமிழர் கட்சி அய்யநாதன்,தமுமுக செயலாளர்கள் பேரா. ஹாஜாகனி, மீரான் மொய்தீன், சேவ் தமிழ் இயக்கத்தின் பரிமளா, காந்திய மக்கள் இயக்க மாநில செயலாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியன்ஜான் முஸ்லிம் சமுதாய கூட்டமைப்பு அனிபா, மே 17 இயக்கத்தினர் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள், சிறுபான்மை சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். இப்போராட்டத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.


தாம்பரத்தில் இருந்து 11 வண்டிகளில் நூற்றுக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காஞ்சி வடக்கு மாவட்டத்தில் இருந்து 400 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். 


Tuesday, 24 April 2012

வரதட்சணை கொடுமையும் இஸ்லாம் வழங்கும் தீர்வும்

மாதாந்திர பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம் -ஏப்ரல் 2012


அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் (தமுமுக) சார்பாக 23.04.2012 மாலை 6.30 மணிக்கு மாதாந்திர பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம் (ஏப்ரல் 2012 ) நடைபெற்றது. அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய சகோதரர் கௌஸ் பாஷா அவர்கள் கிராத் ஓதிய பின் வரவேற்று பேசினார்.

 கோடைக்கால  மருத்துவ குறிப்புகள்
கோடைக்கால  மருத்துவ குறிப்புகள் என்ற தலைப்பில் சகோதரி டாக்டர் . ஆர். வஹிதா ரஹ்மான் M.D. (N.S. மருத்துவமனை, தாம்பரம் ) அவர்கள் உரையாற்றினார்கள் . இதில் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கினார். பெண்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது.

வரதட்சணை கொடுமையும்
 இஸ்லாம் வழங்கும் தீர்வும்

வரதட்சணை கொடுமையும் இஸ்லாம் வழங்கும் தீர்வும் என்ற தலைப்பில் சகோதரி. A . மெஹ்ராஜ் பாத்திமா ஆலிமா அவர்கள் சிறப்பான உரையாற்றினார்கள். நிகழ்கால சம்பவங்களை எடுத்து கூறி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வழிகாட்டுதல்களை எடுத்து கூறினார்.    

இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Friday, 9 March 2012

தலைவர் ஜே .எஸ் . ரிபாய் அவர்களுக்கு ஜாமீன்


தமு மு க மாநில தலைவர் ஜே .எஸ் . ரிபாய் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது . அல்ஹம்துலில்லாஹ். துவா செய்த அனைவருக்கும் நன்றி .

Saturday, 18 February 2012

தாம்பரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கம்

அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் சார்பாக,  தாம்பரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கம் " ஈமானை வலுப்படுத்துவோம் " என்ற தலைப்பில் 08.02.2012  அன்று நடைபெற்றது. ஆலிம் . அப்துல் மஜீத் மஹ்ளரி அவர்களும் , ஆலிமா. ஜைனப் காதர் அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள் . 
 மௌலவி . அப்துல் மஜீத் மஹ்ளரி அவர்கள் உரையாற்றினார்கள் 


கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள்